காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் ஆட்சி கவிழ நாங்கள் தான் காரணம்.. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஆணவம்..!

இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஷாங்க்ரி-லா உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளின் மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் பங்கேற்று பேசினார்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஜிடிபி, சமூக, பொருளாதார விஷயங்களில் பாகிஸ்தான் எங்களைவிட முன்னணியில் இருந்தது. இன்று பொருளாதாரம், மனிதவள மேம்பாடு, சமூக நல்லிணக்கம் என அனைத்து நிலையிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. 2014ல் நடந்த பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு நரேந்திர மோடி பாகிஸ்தான் தலைமைக்கு அழைப்பு விடுத்தார். அதுபோல் இந்தியா பல முறை ராஜதந்திர ரீதியாக பாகிஸ்தானை அணுகியது. கை தட்டுவதற்கு இரண்டு கைகள் வேண்டும்.

ஆனால் நமக்கு விரோதம் மட்டுமே பதிலாக கிடைக்கிறது என்றால் இப்போதைக்கு உறவை முறித்துக்கொள்வதுதான் ஒரு சிறந்த உத்தியாக இருக்கும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பது ஒரு சவாலான விஷயமாக இருந்தது. இதற்காக மொத்த ராணுவ படையில் 15 சதவீதம் பேரை போலி செய்திகள், தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க மட்டுமே பயன்படுத்தினோம்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது உள்நாட்டில் தயாரித்த ஏவுகணைகளும் உதவின. வெளிநாடுகளின் உதவி இல்லாமல் நமது வான்வழி கட்டமைப்புகளை உருவாக்கினோம். துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் வான்பாதுகாப்பை அழித்தது பற்றியும் முப்படைகளின் தளபதி அனில் சவுகான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூரால் அதிகரிக்கும் நம்பிக்கை! உலகளாவிய நம்பிக்கை குறியீட்டில் கெத்து காட்டும் இந்தியா!