ஓஸ்லோ: அரசு முறைப் பயணமாக நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 40 ஆண்டுகளில் நார்வேக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு பிறகு நார்வே வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில், “ஓஸ்லோவுக்கு வந்தடைந்துள்ளேன். விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்ற நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் எனக்கு நன்றி. கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நார்வேக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்தப் பயணம் இந்தியா - நார்வே இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி, நார்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். மேலும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தும் வகையில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை ஓஸ்லோவில் நடைபெறும் இந்தியா - நார்வே உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். இந்த மாநாட்டில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா - நார்வே உறவுகள் பல துறைகளில் வலுவாக உள்ளன. பசுமை எரிசக்தி, காலநிலை மாற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. நார்வே உலகின் முன்னணி பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களில் ஒன்று. இந்தியாவின் சுத்தமான எரிசக்தி இலக்குகளை அடைவதில் நார்வேயின் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://x.com/i/status/2056311765332623554

பிரதமர் மோடியின் இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வட ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நார்வே சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சாதனையுடன் மோடியின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயத்தை தொடங்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ்களை 2,500 ஆக உயர்த்துக! புதிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!