சென்னை: ஈரான் மீதான போரில் அமெரிக்கா எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மாறாக ஈரான் வலுவான பதிலடி கொடுத்து வருவதால் அமெரிக்கா சிரமத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அண்டை நாடான இலங்கை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீது குண்டு வீசும் அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் மத்தலா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டன. ஆனால் இலங்கை அரசு உடனடியாக அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இதுகுறித்து இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “ஜிபூட்டி தளத்தில் இருந்து 8 ஏவுகணைகளுடன் வந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மத்தலா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டன. நாங்கள் உடனடியாக மறுத்துவிட்டோம். பல அழுத்தங்கள் வந்தபோதும், இலங்கை நடுநிலை கொள்கையை உறுதியாகப் பின்பற்றும். எந்த நாட்டின் ராணுவ நடவடிக்கைக்கும் நம் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதையும் படிங்க: யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

இதற்கு முன்பும் ஈரான் கப்பல்களுக்கு இலங்கை அனுமதி மறுத்திருந்தது. இப்போது அமெரிக்க போர் விமானங்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதால், இலங்கை தன் வெளியுறவுக் கொள்கையை தெளிவாக உலகுக்கு உணர்த்தியுள்ளது.
இதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதற்காக நேட்டோ நாடுகள் உட்பட தன் நட்பு நாடுகளிடம் உதவி கேட்ட டிரம்ப், பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட எந்த நாடும் இந்தப் போரில் பங்கேற்க மறுத்துவிட்டன.
ஈரான் வலுவான பதிலடி கொடுத்து வருவதாலும், உலக நாடுகளிடம் இருந்து ஆதரவு கிடைக்காததாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனதளவில் உடைந்து போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் இந்தத் துணிச்சலான முடிவு, சிறிய நாடுகளும் வல்லரசுகளுக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு இந்தியர் மரணம்!! சவுதியில் அரங்கேறிய சோகம்! பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!