ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஈரானுடைய தலைநகரான நெதஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. யூரேனியம் செறிவூட்டலைத் தொடர்ந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வந்தது.

ஈரான் தலைநகர் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரி உசைன் சலாமி உயிரிழந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம், ஈரானின் அணு ஆயுதமயமாக்கல் திட்டம், ஈரானின் முக்கிய செறிவூட்டல் வசதிகள், முன்னணி அணு விஞ்ஞானிகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்ட மையத்தை குறிவைத்து தாக்கியதாக நெதன்யாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ அமைப்புகளை முற்றிலும் அழிக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!
இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் மீது எவ்வித தாக்குதலையும் நடத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்.. காசா மீது தாக்குதல்.. 27 பேர் பரிதாப பலி..!