உலக அரசியல் சூழலில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஈரானை குறித்து வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அணுசக்தி தொடர்பான விவகாரம் மீண்டும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத்சோசியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்பது ஈரானில் உள்ள அணுத்துகள் தளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்க மேற்கொண்ட ஒரு நடவடிக்கை. அதை அங்கிருந்து தோண்டி எடுப்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான வேலையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து, அமெரிக்காவின் அணு கொள்கை மற்றும் ஈரான் தொடர்பான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
ஈரான் (Iran) நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்கா நீண்டகாலமாக சந்தேகம் வெளியிட்டு வருகிறது. யுரேனியம் செறிவூட்டல் என்பது அணு ஆயுதங்களுக்கும், அணுமின் நிலையங்களுக்கும் தேவையான முக்கிய செயல்முறை ஆகும். இதை அடிப்படையாக கொண்டு, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி செய்கிறது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை மீது மீண்டும் கட்டுப்பாடுகள்.. பகீர் கிளப்பிய ஈரான்..!! காரணம் என்ன..??

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு மறுத்து வருகிறது. குறிப்பாக, தங்களின் அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்க அமைதியான பயன்பாட்டிற்காக மட்டுமே என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், டிரம்ப் தொடர்ந்து ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்ததற்கான பின்னணி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளாகும். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் ஆலைகள் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இயேசுவை அவமதிப்பதா..?? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..!! டிரம்புக்கு எதிராக கொந்தளித்த ஈரான் அதிபர்..!!