த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. ஆனால், இந்த நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளில் காவல்துறை தடைகளை ஏற்படுத்துவதாக த.வெ.க நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இது, திமுக அரசின் அச்சத்தால் நடக்கும் அரசியல் திட்டமிட்ட செயல் என்று விஜய் தனது சமூக ஊடகப் பதிவுகளில் குற்றம் சாட்டியுள்ளார். வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் நடைபெறும் விஜயின் பிரச்சாரப் பயணம், மக்களிடையே ஆதரவைப் பெறுவதோடு, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசின் அழுத்தத்தால் காவல்துறை இடையூறு செய்வதாக த.வெ.க தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கொடுப்பதற்கு காலதாமதம், அப்படியே அனுமதி கொடுத்தாலும் கேட்கப்படும் இடத்தில் அனுமதி கொடுக்கப்படாதது, பிரச்சாரத்தின் போது கொடுக்கப்படும் அழுத்தம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் முன்வைக்கின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுவை பாரபட்சமின்றி பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இதோட நிறுத்திக்கோங்க! ஹிந்தி திணிப்பு… தவெக தலைவர் விஜய் ஆவேசம்
உயர் நீதிமன்றம் நிர்ணயத்த கால கெடுவுக்குள் அனுமதி வழங்கிட வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: சாரை சாரையாக குவியும் தொண்டர்கள்...விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... தவெக எடுத்த முக்கிய முடிவு!