ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரானுக்குப் பிடிவாராத ஒரு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்றும், "நிபந்தனையற்ற சரணாகதி" மட்டுமே ஒரே தீர்வு என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்படாது; நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்" என ட்ரம்ப் முழக்கமிட்டுள்ளார். இதன் மூலம் ஈரான் மீதான ராணுவ அழுத்தத்தை அமெரிக்கா குறைக்கப் போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.
ஈரானின் தற்போதைய ஆட்சியதிகாரத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு, அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த தலைவர்களை (Great & Acceptable Leaders) தேர்ந்தெடுத்த பிறகு, ஈரான் மீண்டு வர அமெரிக்கா உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் போர்: அமெரிக்காவிற்கு 100 மணி நேரத்தில் ₹34,000 கோடி செலவு! ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

MIGA - மேக் ஈரான் கிரேட் அகெய்ன்: அழிவின் விளிம்பில் இருக்கும் ஈரானைத் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து மீட்டெடுத்து, முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பொருளாதார ரீதியாகப் பெரியதாகவும், வலிமையாகவும் மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். இதற்காக Make Iran Great Again (MIGA!) என்ற புதிய முழக்கத்தையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஈரான் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று கூறியுள்ள ட்ரம்ப், இந்த மாற்றத்திற்குப் பிறகு ஈரான் உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாகத் திகழும் எனத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் துணை அமைச்சர் டெல்லியில் அமெரிக்காவிற்கு எதிராகப் பேசிய சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் விடுத்துள்ள இந்த சரணாகதி எச்சரிக்கை மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தீவிரமான நிலைப்பாடு, ஈரான் மீதானப் போர் நீண்ட காலத்திற்குத் தொடரும் என்பதையே காட்டுகிறது.
இதையும் படிங்க: தலைக்கு மேலே ஏவுகணை சத்தம்...! துபாயில் சிக்கிய பி.வி. சிந்துவின் உருக்கமான எக்ஸ் பதிவு!