இந்தியாவில் புதிய நிறுவனம் அல்லது தொழில் தொடங்க ஜிஎஸ்டி பதிவு எண் வாங்க வேண்டும் என்பது கட்டாயம். ஜிஎஸ்டி பதிவு எண் வாங்க சம்பந்தப்பட்டவரின் முகவரி, தொழில் தொடங்க உள்ள இடம், பணியாளர்கள் எண்ணிக்கை உள்பட பல்வேறு தகவல்களை தந்து ஜிஎஸ்டி எண் பெற வேண்டும். இந்த நிலையில் ஜிஎஸ்டி எண் வாங்குவது குறித்து இ வி.ஜி.லெர்னிங் டெஸ்டினேஷனின் நிறுவனரும், இயக்குநருமான வினோத் குப்தா லிங்கிடுஇன்-ல் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக வினோத் குப்தாவும், அவரது மனைவியும் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க இருவரும் இணைந்து நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண்ணுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் 20 நாட்கள் கடந்தும் இன்னும் ஜிஎஸ்டி எண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. லஞ்சம் கொடுத்தால் எண் விரைவாக கிடைக்கலாம் என்று வினோத் குப்தா கூறியிருந்தார். இதுக்குறித்து வினோத் குப்தா வெளியிட்ட பதிவில், நாளை நான் ஒரு குற்றம் செய்ய போகிறேன். லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் ஆகும். எனது மனைவியும் மகளும் கூட்டாளிகளாக இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண் பெற 20 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தேன். ஆட்சேபனைகள் வரத்தொடங்கி இருக்கிறது. தற்போது வரை, ஜிஎஸ்டி எண் எனக்கு அவர்கள் வழங்கவே இல்லை. அதனால் நான் நாளை ஜிஎஸ்டி எண்ணைப் பெற குற்றம் (லஞ்சம்) செய்ய முடிவு செய்துள்ளேன்.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூரால் அதிகரிக்கும் நம்பிக்கை! உலகளாவிய நம்பிக்கை குறியீட்டில் கெத்து காட்டும் இந்தியா!

அந்தக் குற்றத்தை (லஞ்சம்) நான் செய்த பின்பு எனக்கு கட்டாயம் ஜிஎஸ்டி எண் கிடைக்கும் என்பது தெரியும் என்று தெரிவித்திருந்தார். இது பெரும் விவாதமானது. இது பேசுபொருளானதால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வினோத் குப்தாவின் பதிவிற்கு பதில் அளித்துள்ளார். இதுக்குறித்த அவரது பதிவில், வரி செலுத்துவோருக்கு சேவை செய்வது எங்கள் பொறுப்பு. ஆனால் அதைச் செய்யும்போது,நாம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அப்படித்தான் நாம் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.

ஜிஎஸ்டி வாரியமும் அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதில் தொடர்ந்து கவனமாகவும் விரைவாகவும் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து வினோத் குப்தாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், வினோத் குப்தாவின் விண்ணப்பம் மே 26ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது டெல்லி ஜிஎஸ்டி அதிகார வரம்புக்குள் வருகிறது. மத்திய ஜிஎஸ்டி அதிகார வரம்புக்குள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது விண்ணப்பத்தில் வாடகை ஒப்பந்தத்தில் பெயர் இல்லை என்றும், இதுபற்றி வினோத் குப்தாவிடம் கேட்கப்பட்டிருந்தது என்றும் ஆனால், அவர் அதற்கு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் தாமதம் குறித்த குற்றச்சாட்டு சிபிஐசி விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: பாத்ரூம் போக தண்ணியில்ல! இதுல இந்தியா கூட போர் ஒரு கேடா..! பாக்.-ஐ வறுத்தெடுத்த அந்நாட்டு நடிகை!