காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.
இதையும் படிங்க: பாத்ரூம் போக தண்ணியில்ல! இதுல இந்தியா கூட போர் ஒரு கேடா..! பாக்.-ஐ வறுத்தெடுத்த அந்நாட்டு நடிகை!
குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.

இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்ஸோஸ் (Ipsos) அமைப்பு மே மாதம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மக்களுக்கு இந்திய அரசின் மீதான நம்பிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன் 62 சதவிகிதமாக இருந்த மக்கள் நம்பிக்கை மே மாதம் 3 புள்ளிகள் அதிகரித்து 65 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நம்பிக்கை குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தொட்ர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

சிங்கப்பூர் 77 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து மலேசியா 69 சதவீதம், இந்தோனேசியா 67 சதவீதம் என்கிற அளவில் உள்ளது. ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 65 சதவீதம் பேர் நாடு சரியான திசையில் செல்கிறது என்று தெரிவித்துள்ளனர். இது உலக நாடுகளின் மொத்த சராசரியான 37 சதவிகிதத்துடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.
வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவற்றில் அந்நாட்டு அரசு மீது மக்களுக்கு அவநம்பிக்கை நிலவுகிறது. பிரான்ஸ், தென் கொரியா மற்றும் பெரு ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன. அந்நாட்டு மக்கள் தங்கள் நாடு தவறான பாதையில் செல்கிறது என சொல்கின்றனர். 19 சதவீதம் மட்டுமே தங்கள் நாடு சரியான பாதையில் செல்வதாக பிரான்ஸ் மக்கள் கூறுகிறார்கள். இது தென் கொரியாவில் 15 சதவீதம் மற்றும் பெருவில் 9 சதவீதமாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தப்பித்தது இதனால் தான்... இல்லைனா? ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!!