இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
இதையும் படிங்க: வாக்குத் திருட்டு... ஓயாத எதிர்க்கட்சிகளின் போராட்டம்... பரபரக்கும் பார்லி.,!
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாகவும், இதற்கு "100% ஆதாரங்கள்" தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இவை வெளியிடப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என எச்சரித்தார்.
மகாராஷ்டிரத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்டதாகவும், பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள், தேர்தல் ஆணையத்தின் உயர் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் பாஜகவின் ஆதரவுடன் செயல்படுவதாகவும், இது தேசத்துரோக செயலாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
வாக்குத்தெருட்டு விவகாரம் வீரியம் எடுத்திருக்கும் நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்குத்திருட்டு நடந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் நடைபெறும் பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. மேலும் டெல்லி சட்டமன்றத் தேர்தலை செல்லாத என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒடிசா தேர்தலில் வாக்குத்திருட்டு நடந்ததாக பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம் சாட்டு இருந்தது. அடுத்தடுத்த மாநில கட்சிகளும் வாக்குத்திருட்டு புகார் எழுப்பி வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: அவங்களால எதையுமே பேச முடியாது! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி ஆவேசம்..!