மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலத்தில் இருந்தே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்த கையோடு முதன் முதலில் வேட்பாளர் பட்டியலானது அதிமுகவில் இருந்து தான் வெளியாகும். அதேபாணியில் நேற்று கூட்டணிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, இன்று காலை முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் சில முன்னாள் அமைச்சர்கள் தொகுதி மாறியுள்ளனர்.
முதலில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என பார்க்கலாம். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல அதிமுகவினுடைய துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி ஏற்கனவே தான் போட்டியிட்ட வேப்பனஹள்ளி தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் திண்டுக்கல் தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.
அதிமுகவினுடைய துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் கடந்த முறை போட்டியிட்ட நத்தம் தொகுதியில் போட்டியிருக்கிறார். அதிமுகவினுடைய தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி 4வது முறையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார். குமாராபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி போட்டியிடுகிறார். 2011, 2016, 2021 ஆகிய மூன்று முறை குமாரபாளையத்தில் போட்டியிட்டதைத் தொடர்ந்து 4வது முறையாக களம் காண்கிறார். ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் 7வது முறையாக போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் தற்போதைய ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி.சண்முகத்துக்கு வந்து மயிலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கடந்த தேர்தலில் வந்து விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனால் விழுப்புரத்தில் இருந்து மைலம் தொகுதிக்கு மாறியுள்ளார்.
இதையும் படிங்க: என்ன ஆட்டத்துக்கு ரெடியா? 2026-லும் ராயபுரம் தான்...! 7வது முறையாக களமிறங்கும் ஜெயக்குமார்..!!
4வது முறையாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாலக்கோடு தொகுதியில் கே.பி. அன்பழகன் போட்டியிடுகிறார் அவரும் பாலக்கோடு தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். நன்னிலம் தொகுதியில் 4வது முறையாக முன்னாள் அமைச்சர் காமராஜ் வந்து போட்டியிடுகிறார். ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடுகிறார்.
4வது முறையாக விராலிமலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் சி. விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். கோவில்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 3வது முறையாக களமிறங்குகிறார். திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சரும், அம்மாவட்ட செயலாளருமான ஆர். பி உதயகுமார் போட்டியிடுகிறார். 2011ல் சாத்தூரில் நின்று வெற்றி பெற்றவர் 2016ம் ஆண்டு விருதுநகர் தொகுதிக்கு மாறினார். 2021ம் ஆண்டில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர், 2வது முறையாக திருமங்கலத்தில் களமிறங்கியுள்ளார்.
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி 4வது முறை போட்டியிடவுள்ளார். ஆனால் அவர் பழையபடி தற்பொழுது சிவகாசி தொகுதியிலேயே திரு கே டி ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. மதுரவாயில் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் 3வது முறையாகவும், திருப்பரங்குன்றத்தில் 2வது முறையாக ராஜன் செல்லப்பாவும் களமிறங்குகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கே. சி. கருப்பண்ணன் பவானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு 4வது முறையாக ஜோலார்பேட்டையிலேயே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கரூரில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்4வது முறையாக களமிறங்குகிறார். அரியலூர் தொகுதியில் அதிமுகவினுடைய முன்னாள் கொறடாவாக இருந்த தாமரை ராஜேந்திரன் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் EPS... அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!