நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி 'காக்கரோச் ஜனதா கட்சி' பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோலுக்கு எதிராக 'E20 ஜனதா கட்சி' என்ற புதிய டிஜிட்டல் இயக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒன்றிய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், எத்தனால் கலக்கப்படாத 100% தூய்மையான பெட்ரோலைத் தேர்வு செய்யும் சுதந்திரம் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடக்கப்பட்ட இந்த இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம், தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே 3 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கடந்து பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.

இளைஞர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் இந்த E20 ஜனதா கட்சி, "நாங்கள் எத்தனால் கலப்புக்கு எதிரோ அல்லது மானியம் கோரியோ போராடவில்லை; எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலால் வாகனங்களின் எஞ்சின் பழுதடைவதோடு மைலேஜும் குறைகிறது. எனவே, மக்களுக்குத் தேவையான 100% ஒரிஜினல் பெட்ரோலை வாங்கும் உரிமையையும், வெளிப்படையான லேபிளிங் முறையையும் அரசு உறுதி செய்ய வேண்டும்" எனத் தங்களது முதன்மை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: E20 பெட்ரோலால் மைலேஜ் குறையும்? ஒப்புக்கொண்ட மத்திய அரசு!! பழைய வாகனங்களுக்கு வார்னிங்..!!
காக்கரோச் ஜனதா கட்சியின் மாபெரும் டிஜிட்டல் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது உருவாகியுள்ள இந்த E20 ஜனதா கட்சியின் பிரச்சாரம் மற்றும் ஆகஸ்ட் 4 அன்று திட்டமிடப்பட்டுள்ள டெல்லி பேரணி அறிவிப்புகள், மத்திய அரசு மற்றும் வாகனத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: கரூர் அரசு பணி ரத்து விவகாரம்: நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்!