தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அதையொட்டி இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வெற்றி விவசாயிகளைக் கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதியுடன் கூறினார். வேளாண் துறையில் தமிழகத்தின் முன்னேற்றங்களை பட்டியலிட்டு பேசினார். டெல்டா மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன என்று கூறினார்.

செயற்கை நுண்ணறிவின் வருகையால் 2021 ஆம் ஆண்டு முதல் புதிய பரிமாணம் பெற்றதாக தெரிவித்தார். வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தொடர வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர். விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறி உள்ளார். நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "வெற்றி" இல்ல "வெற்று" அறிக்கை..! ஏமாத்திட்டீங்க CM..! முதல்வர் விஜயை பந்தாடிய சீமான்.!
விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் 132 கோடி மதிப்பீட்டில் குருவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் மாநில அரசின் சார்பில் 648 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். சூப்பர் இளநினோபால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!