சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த கோரவிபத்தில் 272க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஏர் இந்தியா விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இன்று சென்னைக்கு புறப்பட்ட ஏர் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த விமானம் தாமதமாக, நள்ளிரவு 12 மணிக்கு, சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானம், நடுவானில் சென்னையை நோக்கி பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை, விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விட்டு, மீண்டும் விமானத்தை திருப்பி கொண்டு சென்று, மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால் பயணிகள் ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் வேறு விமானம் மூலமாக 154 பயணிகளும் அதிகாலை 4.35 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டு, காலை 6.05 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைந்தனர். இதனால் மும்பை டு சென்னை விமானம் சுமார் 5 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது.
இதையும் படிங்க: விமான பயணிகள் கவனத்திற்கு.. விமான அட்டவணையை மாற்றிய ஏர் இந்தியா.. ஜூலை 15 வரை மாற்றங்கள்!
இதையும் படிங்க: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு... ஆக்ஷனில் இறங்கிய மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்!!