விஜயவாடா, விசாகப்பட்டினம், கர்னூல், நெல்லூர், காக்கிநாடா மற்றும் ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் கொசு கண்காணிப்பு அமைப்பு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த அமைப்பின் மூலம், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, கொசுக்களைக் கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் ரசாயனங்கள் தெளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு அதிரடி திட்டம்:
ஆந்திரப் பிரதேச அரசு தனது நிர்வாகத்தில் தொழில்நுட்பத்திற்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சிறந்த மற்றும் வேகமான சேவைகளை வழங்கும் நோக்கில், மானமித்ரா வாட்ஸ்அப் நிர்வாக சேவைகளைக் கொண்டு வந்துள்ளது . மேலும், நகராட்சிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து மக்கள் நேரடியாக அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், புரமித்ரா என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
இதையும் படிங்க: ரிதன்யா வழக்கில் ஆரம்பமே அதிரடி... கணவர் குடும்பத்திற்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!

ஏஐ மூலம் கொசு கட்டுப்பாடு:
செயற்கை நுண்ணறிவைப் பயன்டுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளித்து வரும் ஆந்திர அரசு, இப்போது AI உதவியுடன் கொசுக்களைச் ஒழிக்க திட்டமிட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களைக் கட்டுப்படுத்துவதே ஆந்திர அரசின் யோசனை. இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் செயல்படும் ஸ்மார்ட் கொசு கண்காணிப்பு அமைப்பை செயல்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் கொசு கண்காணிப்பு அமைப்பு (SMoSS) சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட் கொசு கண்காணிப்பு அமைப்பு விஜயவாடா, விசாகப்பட்டினம், கர்னூல், நெல்லூர், காக்கிநாடா, ராஜமுந்திரி போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்படும். இங்கு கிடைக்கும் முடிவுகளைத் தொடர்ந்து, அடுத்த கட்டத்தில் மாநிலம் முழுவதும் இது செயல்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட் கொசு கண்காணிப்பு அமைப்பு ஒரு தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் ஒரு பகுதியாக, கொசு உற்பத்தி அதிகமாக உள்ள 66 பகுதிகளில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் செயல்படும் சென்சார்கள் நிறுவப்படும். இந்த சென்சார்கள் அந்தப் பகுதியில் கொசு அடர்த்தி மற்றும் வெப்பநிலை போன்ற விவரங்களைச் சேகரித்து, ஒரு மைய சேவையகத்திற்கு தகவல்களை அனுப்பும்.

இந்த தகவலின் அடிப்படையில், கொசு கட்டுப்பாட்டுக்காக ட்ரோன்கள் உதவியுடன் அந்தந்த பகுதிகளில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. ஸ்மார்ட் கொசு கண்காணிப்பு அமைப்பு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பைலட் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பகுதிகளில் ஸ்மார்ட் கொசு கண்காணிப்பு அமைப்பு நல்ல பலனைத் தந்தால், ஆந்திர அரசு மாநிலத்தில் உள்ள பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
கொசு கட்டுப்பாடு மூலம் நோய்களைத் தடுத்து பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதே அரசின் யோசனை. அந்த வகையில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொசுக்களைக் கட்டுப்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கு.. நாளை விசாரணை.. நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்-க்கு ஜாமீன் கிடைக்குமா?