ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் RCB அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனைக் கொண்டாடும் வகையில், பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கூட்டம்... திணறும் பெங்களூரு... போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க டி.கே.எஸ். வேண்டுகோள்!

மேலும், காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: RCB வெற்றி விழாவில் நிகழ்ந்த சோகம்... கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 10 பேர் உயிரிழப்பு!