ப்ரோ ப்ரோ அங்கிள் அங்கிள் என்று பேசினீர்களே? என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் இன்று கட்சியில் இணைந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, பாஜகவில் இருந்து இதற்கு முன்னால் மாவட்ட தலைவராக பணியாற்றிய தயார் சங்கர் தலைமையில் 50 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.பாஜக சார்பில் அவர்களை வரவேற்கிறேன். பாஜகவில் இருந்து அதிகமானோர் பிரிந்து விட்டார்கள் என கூறினார்கள். நெல்லையிலிருந்து பாஜகவில் இருந்து யாரும் வெளியில் செல்லவில்லை.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பில் ஏற்று 35 நாட்கள் ஆகிவிட்டது. 200 குற்றங்கள் நடைபெற்று உள்ளது. கடந்த இரண்டு தினங்களில் 17 கற்பழிப்பு சம்பவங்கள்.தேர்தலுக்கு முன்பாக மேடைகளில் ப்ரோ ப்ரோ அங்கிள் அங்கிள் என்று பேசினீர்களே. குழந்தைகளை கற்பழிப்பு விஷயம் நடந்தது முதல்வருக்கு தெரியுமா.நெல்லை மாவட்டத்தில் மட்டும் ஏழு குற்றங்கள் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியுமா. காலை 10 மணிக்கு வருகிறார் மாலையில் 5:00 மணிக்கு போகிறார். டிபன் கொண்டு வருகிறார். ஆனால் பேச மாட்டார். சினிமாவில் பிரபலமானவர்களை அழைத்து பேசுவார்.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 12 பாலியல் குற்றங்கள்.. வெட்கக்கேடு விஜய்..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!.
பேட்டியும் கொடுக்கவில்லை யாரையும் அழைத்து பார்க்கவும் இல்லை. கற்பழிக்கப்பட்டவர்கள் பனையூரில் வந்து பார்க்கலாம் என்று நினைக்கிறார்.6 மாதத்தில் இடைத்தேர்தல் வருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம் நடைபெற்றது. சிபிஐ விசாரிக்க வேண்டும்.ஆட்சியில் இருந்து அவர்களை அகற்றப்பட வேண்டும். அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தல் வரப்போகிறது அங்கே யாரும் இறந்து போய்விட்டார்களா?என தெரியவில்லை.ஆதவ் அர்ஜுனா அதிமுகவைச் சார்ந்தவர்களை விலைபேசி வாங்குகிறார்.
ஆட்சிப் பொறுப்பேற்று அவகாசமே கொடுக்க முடியாது அவ்வளவு மோசமான நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.வருகின்ற காலம் பாஜகவினுடைய காலமாக இருக்கும் என்பதே தெரிவித்துக் கொள்கிறேன். பத்து ரூபா பாடல் பாடி கரூர் வந்த பொழுது பாடினார் தற்பொழுது 10 ரூபாய் பாடல் பாட வேண்டியதுதானே.ஆட்சிக்கு எப்பொழுது வந்தோம் என்று அதிர்ச்சியும் இல்லாமல் முதிர்ச்சியும் இல்லாமல் இருக்கிறார்.
திருமாவளவன் இப்பொழுது நடைபெற்றுள்ள படுகொலைகள் பாலியல் சம்பவங்கள் குறித்து பேசுவதற்கு தயாராக இருக்கிறாரா.விஜய் மற்றும் அண்ணாமலையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் நான் எந்த அரசியலும் தொடர்பாக பேசவில்லை.ரஜினி எந்த கட்சிக்கும் வரமாட்டார் என்பதை தான் நான் நினைக்கிறேன்.
சென்னையில் நாளை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.சிவகங்கையில் சிங்க பெண்ணுக்கே காவல் போட வேண்டிய நிலை உள்ளது. மீண்டும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையைச் சேர்க்க வாய்ப்பு இருக்கிறதா?
அது பற்றி நான் ஏதும் கருத்து கூற முடியாது.அடுத்த கட்டத்திற்கு பாஜகவை எடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து இழுத்து இடைத்தேர்தல் வரவழைத்து செய்வது தேவையில்லாதது.
அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறதா? இடைத்தேர்தல் வரும்பொழுது கூறுகிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பாஜக தலைவர்கள்..! பிரதமர் மோடியின் சாதனை நூல்கள் வழங்கிய நயினார்..!