தெலங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படும் இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில், தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 100 மீட்டருக்கும் அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 20 படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: தேச முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ள தெலங்கானா..! மாநில தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்து..!
இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயைணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் போலீசார் திவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சங்கரெட்டி மாவட்ட ஆட்சியர் பி. பிரவீண்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர். இந்த வெடி விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: "தலித்து விரோத நடவடிக்கை" - திமுகவுக்கு எதிராக தீயைப் பற்ற வைத்த திருமா...!