இந்தியாவின் 28வது மாநிலமான தெலுங்கானா, ஜூன் 2, 2014 அன்று நிறுவப்பட்டது . ஆந்திரப் பிரதேசத்திற்கு வெளியே ஒரு தனி மாநிலத்தை உருவாக்க மக்கள் அளித்த பங்களிப்பைக் குறிக்கும் வகையில் தெலங்கானா மாநில தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி அம் மாநில மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள், தெலங்கானா மாநில தினத்தன்று அந்த மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். தேசிய முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பங்களிப்புகளைச் செய்ததற்காக இந்த மாநிலம் அறியப்படுகிறது.
இதையும் படிங்க: சட்ட விரோத குடியேற்றங்கள்.. தென் மாநிலங்களுக்கு அலர்ட் கொடுக்கும் பவன் கல்யாண்.!!

கடந்த பத்தாண்டுகளில், மாநில மக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநில மக்கள் வெற்றி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும். இவ்வாறு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: முக்கிய ஆவணங்கள் திருட்டு.. போலீஸ் விசாரணை வளையத்துக்குள் ராஜ்பவன் ஊழியர்கள்!