ஹரியானாவைச் சேர்ந்த ஷீத்தல் என்ற மாடல் அழகி, சோனிபட் மாவட்டத்தில் உள்ள கால்வாயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். ஜூன் 14 ஆம் தேதி அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் காணாமல் போனதாக பானிபட்டில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சோனிபட்டின் கார்கோடா பகுதியில் உள்ள கால்வாயில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஷீத்தல் என்கிற சிம்மி சவுத்ரி, ஹரியானா இசைத் துறையில் பணிபுரிந்த ஒரு மாடல் ஆவார். மாடலிங் செய்வதற்கு முன்பு, ஷீத்தல் கர்னாலில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்தார்.
இதையும் படிங்க: அரக்கோணம் பாலியல் புகார்.. இதுதான் நடந்தது... காவல்துறை விளக்கத்தால் பரபரப்பு!!

சமீபத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு இசைத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். இந்த நிலையில் தான் அவரது உடல் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து சோனிபட் துணை காவல் ஆணையர் அஜித் சிங் கூறுகையில், கால்வாயில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடலை அடையாளம் காணும் பணியில், பானிபட்டில் ஷீத்தல் என்ற பெண் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!