நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 24 அன்று நாடு தழுவிய அமைதி வழி போராட்டத்திற்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட தலைநகரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பிற சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தொடர்ந்து நீதி கோரும் குரல்கள் உள்ளன. பல மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொறுப்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக வலுப்பெற்று, பாராளுமன்ற நோக்கிய பேரணியாக மாறியது. போலீஸ் நடவடிக்கைகள், உரையாடல்கள் உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியிலும் CJP தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. மத்திய அரசு - கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உடனான பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: வெடிக்கும் நீட் போராட்டம்... ஒரு நாள் டைம் குடுங்க...! CJP கட்சியிடம் அவகாசம் கேட்ட மத்திய அரசு..!!
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற விவகாரத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது என கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் தெரிவித்துள்ளார். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாளை மதியம் வரை அவகாசம் கோரி உள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வால் பலியானோருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி! கடும் சிறைத்தண்டனை, அதிக அபராதம்! வருகிறது புதிய சட்டம்!