டெல்லியில் கோடை வெயில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில அரசு புதிய CHILL PLAN என்று அழைக்கப்படும் வெப்ப அலை செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடைமுறை மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. முதலமைச்சர் ரேகா குப்தா இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, அதை தரைமட்டத்தில் கடுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு திட்டம் மிகவும் அறிவியல் ரீதியானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.இந்த CHILL PLAN-ன் முக்கிய அம்சங்களில் ஒன்று, பள்ளிகளில் மாணவர்களின் நீரேற்றத்தை உறுதி செய்வதாகும். டெல்லி கல்வித் துறை அனைத்து அரசு, தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் சிறப்பு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒவ்வொரு 45 முதல் 60 நிமிடங்களுக்கும் ஒரு "வாட்டர் பெல்" மணி அடிக்கப்பட வேண்டும். இந்த மணி ஒலிக்கும் போது மாணவர்கள் அனைவரும் நிறுத்தி, தண்ணீர் குடிக்க வேண்டும். இது நீரிழப்பைத் தடுக்க உதவும்.

மேலும், மாணவர்களிடையே "பட்டி சிஸ்டம்” அமல்படுத்தப்படும். அதாவது, மாணவர்கள் ஜோடி ஜோடியாக இருந்து ஒருவரையொருவர் கண்காணித்து, வெப்பத்தால் ஏற்படும் அறிகுறிகளை உடனடியாகப் புகாரளிக்க வேண்டும்.பள்ளிகளில் வெளிப்புறக் கூட்டங்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும். வெளிப்புற வகுப்புகள் தவிர்க்கப்பட்டு, உள்ளே நடத்தப்படும். பள்ளி வளாகங்களில் குளிர்ந்த குடிநீர் எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மாணவர்களுக்கு ORS வழங்குவதும் உள்ளடங்கும். இந்த நடவடிக்கைகள் மாணவர்களை வெப்ப அலை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மக்களே... உஷார்..!! சென்னையை வாட்டி வதைக்கப்போகும் வெயில்..!! வானிலை அப்டேட்..!!
பொது இடங்களில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பேருந்து நிறுத்தங்களில் உயர் அழுத்த மிஸ்டிங் சிஸ்டம் நிறுவப்படும். இது தண்ணீரை சாரல் போல் தெளித்து, சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக்கும். பிஸி பேருந்து நிறுத்தங்கள் மற்றும் டெர்மினல்களில் குளிர்ந்த குடிநீர் மற்றும் ORS வசதிகள் ஏற்படுத்தப்படும். நகரின் பல்வேறு இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள், வாட்டர் கூலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குளிர்ச்சி புள்ளிகள் அமைக்கப்படுகின்றன. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிழல், குடிநீர் மற்றும் ஓய்வு நேரம் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!! ஸ்விஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ..!! 6 பயணிகள் காயம்..!!