திமுக தேர்தல் குழுவினர் தற்போது தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்களை விவாதித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, கடந்த ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் திசையில் திட்டமிடல் செய்து வருகிறது.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, கனிமொழி எம்.பி. தலைமையில் செயல்பட்டு வருகிறது. இக்குழு, தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சேகரித்துள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டங்களில் இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து, தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக அலைபேசி எண்கள், வலைதளம், சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான போர்ட்டல் போன்றவற்றையும் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திமுக தேர்தல் குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குற்ற சமூகமாக மாறிவிட்டோம்... யாருக்கும் பாதுகாப்பில்ல... சீமான் ஆதங்கம்..!!
தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை மும்முரமாக நடந்து வரும் நிலையில் பிறகு தேர்தல் அறிக்கை என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதனால் விரைவில் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் முன்னிலையில் சமர்ப்பித்து வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் தயாரிப்பு குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: விறுவிறு அரசியல் களம்... நீடிக்கும் இழுபறி..! மார்ச் 16ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை...!!