சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கவாசி லக்மா மற்றும் அவரது மகன் ஹரீஷ் கவாசி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை பணமோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் 2,100 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான ஊழல் தொடர்புடையது.

இந்த நிலையில், ராய்ப்பூர் மண்டல அலுவலகத்தின் அமலாக்க இயக்குநரகம், பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 விதிகளின் கீழ் ரூ. 6.15 கோடி மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி இருந்ததே இல்லை... பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!!

சத்தீஸ்கர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பெயரில், சுக்மாவில் உள்ள காங்கிரஸ் பவன், கவாசி லக்மா என்ற பெயரில் ராய்ப்பூரில் ஒரு குடியிருப்பு வீடு,ஹரிஷ் கவாசியின் பெயரில் சுக்மாவில் ஒரு குடியிருப்பு வீடு ஆகியவை பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!