விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா, பிரதான் மந்திரி உஜ்வாலா போன்ற திட்டங்கள் அதிக வரவேற்பைப் பெற்றன. இதுபோல பல வகையான திட்டங்கள் பல வகையான பயனாளிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல புதிய திட்டங்களும் மத்திய மோடி அரசாக் அறிமுகப்படுத்தப்படலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா யோஜானா எனப்படும் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் யோஜனா எனப்படும் ஏழைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டம், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா மிக முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாக உள்ளது. பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.6,000 நிதி உதவி அளிக்கின்றது. இது 4 மாதங்களுக்கு ஒரு முறை என ஒரு வருடத்தில் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: மனித குலத்திற்கே எதிரானது பாகிஸ்தான்.. காஷ்மீரில் வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி..!
ஒவ்வொரு தவணையிலும் தலா ரூ.2,000 வழங்கப்படுகின்றது. இதுவரை 19 தவணைகள் அளிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதத்தில் 19ஆம் தவணையை வெளியிட்டார். இதன் மூலம் 2.4 கோடி பெண்கள் உட்பட 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்.

20ம் தவணை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளில் ஏழைகள் நலனுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளில் விசாயிகளுக்காக பாஜ அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவர்களது வாழ்வில் செழிப்பை உறுதி செய்துள்ளது.

கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம். விவசாய துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். மண் வளம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
அவை பெரிதும் விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்காக வரும் காலத்தில், எங்களது பணி தொடரும். விவசாயிகளின் கண்ணியம் மற்றும் செழிப்புக்காக நாங்கள் பணியாற்றி உள்ளோம். கிராமப்புறங்களில் மக்களின் மேம்பாட்டுக்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈபிள் டவரை மிஞ்சும் உயரம்! 1315 மீட்டர் நீளம்.. ரூ.1,400 கோடியில் கட்டப்பட்ட செனாப் பாலத்தை திறந்து வைத்தார் மோடி..!