புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அக்கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். குறிப்பாக இதில் எஸ் ஐ ஆர் பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசகையில்: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி உள்ளது மிகப் பெரிய பாதிப்பு. இது மிகப்பெரிய பாதக செயல். மகாத்மா காந்தி படுகொலைக்கு ஈடான படுகொலை 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியது. இரண்டாவது முறையாக காந்தியை கொலை செய்துள்ளனர்.
இது நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டம் அல்ல. நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டத்தில் நாடு முழுவதும் பணி நடக்கும். ஆனால் தற்போது எந்த மாநிலத்தில் ஒன்றிய அரசு பணி சொல்கிறதோ அந்த இடத்தில் மட்டும் தான் பணி செய்ய வைக்கின்றனர். நாங்கள் அறிவித்த திட்டத்தில் வேலை கேட்டால் வேலை கொடுக்க வேண்டும். வேலை கொடுக்கவில்லை என்றால் வேலையின்மை படி கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது வேலை கொடுத்தால் தான் வேலை கேட்க வேண்டும்.
இதையும் படிங்க: ஏபிஜே அப்துல் கலால் பெயரில் ஏவுகணை! 2.5 டன் அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் அரக்கன்!! இந்தியா மாஸ்!
நாங்கள் அறிவித்த திட்டத்தில் ஒன்றிய அரசு முழு ஊதியத்திற்கும் பொறுப்பு. பொருள்களில் 90% ஒன்றிய அரசு பொறுப்பு. 10% தான் மாநில அரசு பொறுப்பு. இப்ப அப்படி இல்லை. மொத்த செலவில் 60 சதவீதம் தான் ஒன்றிய அரசு பொறுப்பு. 40% மாநில அரசின் பொறுப்பு. மாநில அரசே ஏற்கனவே பணம் தட்டுப்பாடு வருவாய் தட்டுப்பாடு கடன் வாங்குகிறார்கள் ஒன்றிய அரசுடைய ஒப்புதலோடு கடன் வாங்குகிறார்கள். 40% மாநில அரசு பொறுப்பு என்றால் எத்தனை மாநிலங்கள் இதை செய்வார்கள். இப்படி செய்வதால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் முதலில் நான்கு மாவட்டங்களில் செயல்படுத்துவார்கள் பிறகு ஆண்டு முழுவதும் இந்த வேலையை அறிவிக்காமல் இரண்டு மாதத்திற்கு அறிவியுங்கள் என்று சொல்வார்கள்.
மாநில அரசு மிகப்பெரிய நிதிச் சுமையை சுமக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனால் இந்த திட்டம் நாங்கள் அறிவித்த திட்டத்திற்கு நேர் எதிரானது. இதற்கு கேரண்டி கிடையாது நாங்கள் அறிவித்த திட்டத்திற்கு கேரண்டி உத்தரவாதம் இருந்தது. இப்போது இந்த திட்டத்திற்கு யார் கேரண்டி ஒன்றிய அரசுக்கும் கேரண்டி கிடையாது. மாநில அரசுக்கும் கேரண்டி கிடையாது.
இது நாங்கள் அறிவித்த மகாத்மா காந்தி பெயரால் அறிவித்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சிதைத்து புதைத்து விட்டனர். இது இவர்களின் சொந்த திட்டம். அந்தத் திட்டத்தில் வாய்க்குள் நுழையாத பெயர். மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் என்றால் அனைவருக்கும் புரியும். அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்தால் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் தான்.
இப்ப இந்தத் திட்டத்தின் பெயர் விபிஜிராம்ஜி என்று வைத்துள்ளனர் அதில் ராம் இருக்கு என்று நினைக்க வேண்டாம். ராமில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இது அவர்களுக்கே புரியாது. நன்றி சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதுகிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ஹிந்தி பேசுகின்ற இந்தி மட்டும் தெரிந்த எம்பி இதை படித்தார்கள் என்றால் அவர்கள் படிக்கவே முடியாது.
ஹிந்தி அல்லாத எம்பிக்கள் இந்திய அல்லாத மக்கள் இதை படிக்கலாம் ஆனால் புரியாது. விபிஜி ராம்ஜி என்றால் யாருக்காவது புரியுதா எனக்கு தெரியாது. 2015ல் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோல்வியின் நினைவு சின்னமாக மகாத்மா காந்தி தேசிய உறுதி அளிப்பு திட்டம் இருக்கும் என்று தெரிவித்து இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டாம் இருந்து விட்டு போகட்டும் என்று கூறினார்.
தற்போது பத்தாண்டுகள் கழித்து இந்த திட்டத்தை படுகொலை செய்துள்ளனர். இந்தத் திட்டத்தில் 12 கோடி மக்கள் நம்பி இருக்கின்றனர். எட்டுக்குடி 60 லட்சம் பேர் வேலை அட்டை இருக்கிறது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஆறு கோடி பேர் வேலை பார்த்ததில் தற்பொழுது 44 நான்கரை கோடி மட்டும் தான் வேலை பார்க்கின்றனர்.
100 நாட்கள் இவர்கள் கொடுத்ததே கிடையாது. சராசரி 50 நாட்கள் தான் கொடுக்கிறார்கள். ஊதியம் பாக்கிய பல்லாயிரம் கோடி பாக்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தை குழைப்பது சிதைப்பது புதைப்பதுதான் இவர்களுடைய நோக்கம் அந்த நோக்கம் வெட்டம் வெளிச்சமாகிவிட்டது. அதற்காகத்தான் போராட்டம் எல்லாம் நடக்கிறது.
தேர்தலில் இது தலையாக பிரச்சனையாக இருக்கும். 12 கோடி மக்களில் யாருக்காவது பணம் தட்டுப்பாடு என்றால் இந்த வேலைக்குச் சென்று அங்கு கிடைக்கும் ஊதியத்தை பெறுவார்கள். அந்த வீட்டில் அடுப்பு எரிக்கலாம் தற்போது பட்டினியாகத்தான் படுக்க வேண்டும். 120 கோடி பேரும் பட்டினியாக தான் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய 12 கோடி மக்கள் இந்த திட்டத்தை நம்பி இருந்தார்கள் அவர்கள் வயிற்றிலே அரசு அடித்திருக்கிறது அவர்கள் மன்னிக்க மாட்டார்கள் இந்த அரசை.
125 நாட்களாக உயர்த்தியதை 200 நாட்களாக உயர்த்த வேண்டியதுதானே. இவர்கள் கொடுப்பதே சராசரியாக 50 நாட்கள் தான். ஒரே எட்டாத போது 125 ஏன் 250 என்று ஆக்க வேண்டியது தானே அதில் அர்த்தமில்லை எனக்கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாக்., சதி!! ஜார்ஜ் புஷ்ஷிடம் புதின் பேசிய ரகசியம்! 24 ஆண்டுகளுக்குப் பின் வெளி வந்த உண்மை சம்பவம்!