முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகை முதல் மக்களைத் தேடி மருத்துவம் வரை பல்வேறு முன்னோடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய சில திட்டங்கள் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் ஒன்று.
தற்போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கும் வேளையில் இலவச லேப்டாப் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்துயிர் ஊட்டியுள்ளார். மக்கள் அம்மா லேப்டாப் என அழைக்கப்பட்ட திட்டத்தை, ”உலகம் உங்கள் கையில்” என மாற்றியுள்ளார்.
அரசு பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்டவற்றில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 10 லட்சம் பேருக்கு லேப் டாப் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாயின் மடியில் இருந்தே குழந்தை கடத்தப்படும் அவலம்..! நீதி கிடைக்கணும்... திமுக அரசுக்கு விஜய் கண்டனம்..!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பில் பயின்றவர்களுக்கும் 2025-26-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி கடந்த 2025-26 ஆண்டு பட்ஜெட் உரையின் போது அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா இன்று ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினர். முதற்கட்டமாக ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 377 மாணவ மாணவிகளுக்கும், நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 279 மாணவ மாணவிகளுக்கும், கோர்க்காடு, அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 46 மாணவ மாணவிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்வி நவீன வளர்ச்சி ஏற்பட்டுள்ளதையும், மாணவர்களுக்கு வந்து பயன்பெறும் வகையில் வந்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். புத்தக சுமையை குறைக்கவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரொம்ப விசில் அடிக்காதீங்க..! தொண்டர்களை ஜாலியாக கலாய்த்த அன்புமணி..!