குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய விமானம் மதியம் 1:39 மணிக்கு 23 வது ரன்வேயிலிருந்து புறப்பட்டதாகவும், விமானத்திலிருந்து தரை கட்டுப்பாட்டு தளத்திற்கு mayday எமர்ஜென்சி அழைப்பு விடுக்கப்பட்டது., தரை கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட எந்த அழைப்புக்கும் விமானத்திலிருந்து பதில் கிடைக்கவில்லை என்றும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

போயிங் 787 - 8 ரக ஏர் இந்தியா விமானம் லண்டன் புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. 230 பயணிகள் 2 விமானிகள் 10 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தை கேப்டன் ஸ்மித் சபர்வால் கிளைவ் குந்தர் இயக்கியுள்ளனர் என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமானத் இயக்கிய கேப்டன் ஸ்மித் சபர்வாலுக்கு 8,200 மணி நேர பணி அனுபவம் உள்ளது.,இணை கேப்டன் கிளைக் குந்தருக்கு 1,100 மணி நேரம் பணி அனுபவம் உள்ளது என்றும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இதனிடையே, ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பகுதிக்கு 90 பேர் கொண்ட என் டி ஆர் எஃப் குழுவினர் விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இதுல மோடி ஆட்சியை விட மன்மோகன் சிங் ஆட்சிதான் பெஸ்ட்.. தரவுகளுடன் துள்ளிக் குதிக்கும் ப. சிதம்பரம்!!

இந்த நிலையில், விபத்து நடந்த அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து எங்க உள்ள அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி பயணித்ததாக கூறப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அகமதாபாத்திற்கு விரைந்துள்ளார். விமான போக்குவரத்து அமைச்சர் இடம் பிரதமர் மோடி விபத்து தொடர்பாக கேட்டறிந்தார். பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பகிர விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆரோக்கியத்தோடு இருங்கள் பினராயி விஜயன்.. பிரதமர் மோடியின் அன்பு வாழ்த்து..!