குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்து நிலையில், 204 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்ட நிலையில் ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்துள்ளார். இருக்கை எண் 11A வில் பயணித்த ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்ற 40 வயது நபர் உயிர் பிழைத்தார். வேறு இருக்கையில் அமர்ந்திருந்த இவரது சகோதரர் அஜய் குமார் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: லண்டன் போய் போன் பண்ணுப்பா சொன்னேன்... என் மகனே போயிட்டான்! கதறி துடிக்கும் தாய்...

தன் உறவினர் வீட்டுக்கு வந்து, லண்டன் திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது, எமர்ஜென்சி கதவு வழியாக குதித்து உயிர் பிழைத்ததாக அவர் கூறியுள்ளார். டேக் ஆஃப் ஆன 23 நொடிகளில் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும், பயங்கர சத்தத்துடன் விமானம் தீப்பிடித்து நொறுங்கியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்தின் கோரத் தாண்டவம்.. முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உயிரிழந்த சோகம்!!