குஜராத்தில் நிகழ்ந்த விமான விபத்து நமக்கெல்லாம் ஒரு செய்தியாக இருந்தாலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு தீராத வலிதான். எப்படியும் ஊர் சென்று திரும்பி விடுவார்கள் என்ற மகிழ்ச்சியில் தான், அனுப்பி வைத்திருப்பார்கள். கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் இனிமேல் இவர்களை காணவே முடியாது என்பதை. விமான விபத்து நிகழ்ந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அது தன் மகன், மகள், தந்தை, தாய், சகோதரன் என எந்த உறவு சென்றிருந்தாலும் அவர்கள் சென்ற விமானமாக இருக்கக் கூடாது என்பதே பல நெஞ்சங்களின் இன்றைய பிரார்த்தனைக்காக இருந்திருக்கும். எத்தனை எத்தனை பிரார்த்தனைகளோ இன்று நிறைவேறாமல் போயிருக்கும்.

தன் உறவுகளை இழந்து, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் கண்ணீர் சிந்தும் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்ற வார்த்தைகளே நம்மிடம் இருக்காது. அப்படி தன் மகனை நல்லபடியாக சென்று வரவேண்டும் என வாழ்த்தி அனுப்பிய ஒரு தாயின் குமுறல் இதோ...
இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்தின் கோரத் தாண்டவம்.. முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உயிரிழந்த சோகம்!!

எத்தனை நேரம் ஆனாலும் சரி லண்டன் சென்றவுடன் போன் செய்ய வேண்டும் எனக் கூறினேன்.,இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் மகனிடமிருந்து அழைப்பு வராது.விமான விபத்து குறித்து அறிந்தவுடன் என் மகன் சென்று விமானமாக இருக்கக் கூடாது என எண்ணினேன்.,அது பொய்யானது! இந்த விமான விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்திருந்தால் அது அவர்களுக்கு மறு பிறவியாக இருக்கும் என தன் மகனை இழந்த ஒரு தாய் உருக்கமாக கூறியுள்ளார்.

இனி எத்தனை ஆண்டுகளானாலும் என் மகனிடமிருந்து அழைப்பு வராது என்பதை எண்ணி ஒரு தாய் சொல்லுவதை கேட்கவே நமக்கு நெஞ்சம் குமுறுகிறதே... இப்படி எத்தனை எத்தனை தாய்மார்களின், தந்தைமார்களின், மனைவிகளின், கணவர்களின் உள்ளம் துடிக்கிறது என்பதை நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... இனி இதுபோல ஒரு சம்பவம் நிகழக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: குஜராத் விமான விபத்து... 170 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சி..