காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது.
இதையும் படிங்க: பாதுகாப்பு படையில் கருப்பு ஆடு.. ராணுவ தகவல்கள் கசிந்தது இப்படி தான். பாக்.-க்கு உளவு பார்த்த CRPF வீரர் கைது..!

உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இன்னமும் ஆப்ரேஷன் சிந்தூர் முடிவடைய வில்லை. பயங்கரவாதத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்கதலை அடுத்து, இந்தியாவின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து விளக்குவதற்காக, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழுவினர் பனாமா நகரில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தனர். பனாமா பார்லி., உறுப்பினர்களிடம் சசி தரூர் கூறியதாவது: ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? என்று காத்திருந்தோம்.

பின்னர் தான் மே 7ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தைத் தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாத முகாம்களின் தலைமையகத்தைத் தாக்கினோம்.போரைத் தொடங்குவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் பயங்கரவாதிகள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் அனைவரும் வெவ்வேறு அரசியல் பின்னணியிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகிறோம், ஆனால் நாங்கள் தேசிய நோக்கத்தில் ஒன்றுபட்டுள்ளோம்.

பயங்கரவாதிகள் தாங்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பயங்கரவாதத்திற்கு எதிரான நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில், எல்லை கடந்து சென்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா தாக்கியது எம்.பி சசி தரூர் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்.? இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் - பாக்., பிரதமர் திடீர் சந்திப்பு..!