காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூரை வைத்து கலவரத்தை தூண்ட சதி! கம்பி எண்ணும் சட்டக்கல்லூரி மாணவி!

இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. பஞ்சாப், குஜராத், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பிறகு நவீன தாக்குதல் ஆயுதங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தின் போது முன்பு எப்போதும் இல்லாத வகையில் ட்ரோன் பயன்பாடு அதிகமாக இருந்தது. எதிர்காலத்தில் இது போன்ற மேம்பட்ட தாக்குதல்களை முறியடிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா சோதித்து பார்க்கிறது. அந்த வகையில் நாடு முழுவதும் தற்கொலைப்படை ட்ரோன்கள், மின்னணு போர் கருவிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன.

போக்ரான் மற்றும் பாபினா பகுதியில் உள்ள துப்பாக்கி சூடு தளங்கள், ஜோஷிமத் உட்பட முக்கிய இடங்களில் போர் பயிற்சி சோதனைகள் நடத்தப்பட்டது. ஆளில்லா வான்வழி அமைப்புகள் , துல்லியமாக வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், தற்கொலைப்படை ட்ரோன்கள், ஆயுத விநியோக அமைப்புகள், ஒருங்கிணைந்த ட்ரோன் இடைமறிப்பு அமைப்பு, இலகுரக ரேடார்கள், இதர மின்னணு போர்க்கருவிகள் சோதிக்கப்பட்டது. இதே போல ஆக்ரா மற்றும் கோபால்பூரில் வான் பாதுகாப்பு உபகரண சேதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கண்காணிக்க அனைத்து செயல்பாடுகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பகளை போர்க்கள சூழலில் மிக வேகமாக பயன்படுத்துவது இந்த சோதனையின் நோக்கம் என பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர்ல இப்படி நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல.. இதுவரை வெளிவராத தகவல்களை சொல்லும் தளபதி..!