ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. அதேபோல், ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால், இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது.

இந்த நிலையில், ஈரான், இஸ்ரேல் வழியாக இந்தியாவுக்கு வரும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானங்கள் திரும்பி வருவதாகவும், லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தில்லி நோக்கி வரும் விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து ஈரான் வழித்தடத்தில் செல்லும் விமானங்கள் ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 'Operation Rising Lion' ஈரானை தடுத்து நிறுத்தணும், இல்லனா..! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!
இன்று அதிகாலை 5.39 மணிக்கு மும்பையில் இருந்து லண்டனுக்கு ஏர் இண்டியா விமானம் புறப்பட்டது. 3 மணி நேரம் வானில் பறந்த அந்த விமானம் மும்பை விமான நிலையத்துக்கே திரும்ப வந்தது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக வான் எல்லைகள் மூடப்பட்டதால் விமானம் மீண்டும் மும்பைக்கே திரும்பி வந்ததாக ஏர் இண்டியா நிர்வாகம் விளக்கம் அளித்தது.

மும்பை – லண்டன் விமானம் மட்டுமல்ல, இஸ்ரேல் – ஈரான் சண்டையால் இன்னும் பல இந்திய விமானங்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. பல விமானங்கள் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வந்தன. இன்னும் பல விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. AI130 - லண்டன் – மும்பை விமானம் (வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI102 - நியூயார்க்-டில்லி விமானம் (ஷார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI116 - நியூயார்க்-–மும்பை விமானம் - (ஜெட்டாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI2018 - லண்டன்– டில்லி விமானம் (மும்பைக்கு திருப்பி விடப்பட்டது).
AI129 - மும்பை-–லண்டன் விமானம் (மும்பைக்கு திரும்பியது). AI119 - மும்பை– -நியூயார்க் விமானம் (மும்பைக்கு திரும்பியது). AI103 - டில்லி–-வாஷிங்டன் விமானம் (டில்லிக்கு திரும்பியது). AI106 - நெவார்க்–-டில்லி விமானம் (வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI188 - வான்கூவர்–டில்லி விமானம் (ஜெட்டாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI101 டில்லி-நியூயார்க் விமானம் (பிராங்க்பர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டது). AI126 - சிகாகோ-–டில்லி விமானம் (ஜெட்டாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI132 - லண்டன் –-பெங்களூரு விமானம் (ஷார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டது).

AI2016 - லண்டன் –டில்லி விமானம் (வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI104 - வாஷிங்டன்-– டில்லி விமானம் (வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது). AI190 டொரண்டோ-–டில்லி விமானம் (பிராங்க்பர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டது). AI189 - டில்லி-–டொரண்டோ விமானம் (டில்லிக்கு திரும்பியது).
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானில் உள்ள அணு ஆயுத ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளின் வான் எல்லைகளை அந்தந்த நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியதே இந்திய விமான சேவைக்கு பாதிப்புக்கு காரணம். இதனால் பல ஆயிரம் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த எதிர்பாராத இடையூறால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக ஏர் இண்டியா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் புக் செய்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும். மாற்று விமானத்தில் பயணிக்க விருப்பம் தெரிவித்த பயணிகளுக்கு விரைவில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும். நடுவழியில் சிக்கிய பயணிகளை அவர்களது செல்ல வேண்டிய நகரங்களுக்கு மாற்று விமானம் மூலம் அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஏர் இண்டியா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கிரேட்டா தன்பர்க்-க்கு ஒரே ஒரு அட்வைஸ்.. தனது ஸ்டைலில் தெறிக்க விட்ட ட்ரம்ப்..!