அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. விமானம் பறக்க ஆரம்பித்த 3 விநாடிகளிலேயே 625 அடி உயரத்தை தொட்ட போது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் நிலையில் 242 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுவதால் அவர்களின் கதி என்ன என்பது குறித்த அச்சமும் அதிகரித்தது.

விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி உட்பட 169 இந்தியர்கள், 50 பிரிட்டீஷ்காரர்கள், ஒரு போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர், ஒரு கனடா நாட்டைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும், இதில் 14 குழந்தைகள் அடக்கம் என்றும் கூறப்படுகிறது. மேலும் 10 விமான பணியாளர்கள் மற்றும் 2 பைலட்கள் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: வெறும் ரூ.1,199 விலையில் விமானத்தில் பயணம் செய்யலாம்.. ஏர் இந்தியா கொடுத்த பரிசு..
தனது விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் துறையினர் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், 50 இறந்தவர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: மனதை உலுக்கிய கோர விபத்து... 169 இந்தியர்கள் பயணம்...AIR INDIA அதிகாரப்பூர்வ அறிவிப்பு.