குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் சிக்னலை இழந்த நிலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் 230 பேர் பயணிகள், 2 விமானிகள், 10 ஊழியர்கள் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி பயணித்ததாக தெரிகிறது. பயணிகளின் நிலை என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் AI 171 ரக விமானம்தான் விபத்தில் இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான விமானத்தில் பயணித்தவர்களில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டவர், ஏழு போர்ச்சுகீசியர், ஒரு கனடா நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர எண்களும்( 1800 5691 444) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சிதறிய விமானம்... முன்னாள் முதலமைச்சரின் நிலை என்ன? குஜராத்தில் பெரும் பதற்றம்...

இந்த விமான விபத்து தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், விமான விபத்து தொடர்பான உதவி என்பதை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. 02070085000 என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என்று தெரிவித்துள்ளது. விமான விபத்தின் எதிரொலியாக போர்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு டாடா குழும தலைவர் சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பயணிகள் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு அளிப்பதை முதன்மை நோக்கம் என்றும் கூறியுள்ளார்.மேலும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கும்போது மேலும் புதுப்பிப்புகள் பகிரப்படும்., அவசர மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தகவல்களைத் தேடும் குடும்பங்களுக்கு ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: சிதறிய விமானம்... முன்னாள் முதலமைச்சரின் நிலை என்ன? குஜராத்தில் பெரும் பதற்றம்...