டெல்லி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள ஒரு பெரிய பயங்கரவாத சதி திட்டம் உளவுத்துறையால் தகர்க்கப்பட்டுள்ளது. செங்கோட்டை, சாந்தினி சௌக், பாரம்பரிய பகுதிகள், கோயில்கள் நிறைந்த இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மிகப்பெரிய குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த 6ஆம் தேதி ஷியா மசூதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே பொறுப்பேற்றது. ஆனால் பாகிஸ்தான் அரசு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குற்றம் சாட்டியது. இரு நாடுகளும் இதை கடுமையாக மறுத்தன.
இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் பெரிய அளவில் குண்டு வெடிப்பை நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் சாந்தினி சௌக், செங்கோட்டை சுற்றுப்புறங்கள், கோயில்கள் ஆகிய இடங்கள் இலக்காக இருந்தன.
இதையும் படிங்க: டார்கெட் ‘26–26’! இந்தியாவில் புகுந்து தாக்க பாக்., பயங்கரவாதிகள் சதி!! குடியரசு தினத்தில் பகீர்! ஹை அலர்ட்!

இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் பெரிய அளவில் குண்டு வெடிப்பை நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் சாந்தினி சௌக், செங்கோட்டை சுற்றுப்புறங்கள், கோயில்கள் ஆகிய இடங்கள் இலக்காக இருந்தன.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் முழு அளவில் உஷார் நிலைக்கு சென்றுள்ளது. சந்தேக நபர்கள் மீது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கோட்டை, சாந்தினி சௌக் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் சி.சி.டி.வி கேமராக்கள், போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சதி திட்டம் தகர்க்கப்பட்டது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதால், டெல்லி மக்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவுகிறது.
இதையும் படிங்க: திருவள்ளுவருக்கு காவி உடையா..?? இபிஎஸ்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!! கொந்தளித்த திருமாவளவன்..!!