தொகுதி மறு வரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் கடும் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் மசோதா மீது பதிலளிக்க தயார் என்று அமித் ஷா பதில் கொடுத்துள்ளார். தொகுதி மறு வரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொகுதி மறுவறையறை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகளை மீறி இரண்டு மசோதாக்களை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவைகள் தாக்கல் செய்தார். அரசியலமைப்பு சட்டம் 131 வது திருத்தம் மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஒரு தரப்பால் கைப்பற்றப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். மகளிர் இட ஒதுக்கீட்டை கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தக் கூறியதாகவும் தெரிவித்தார். அடிப்படை அரசியலமைப்பை தகர்த்து உரிமைகளை கைப்பற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!
தொகுதி மறு வரையறை மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார். மசோதாக்கள் குறித்து எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் பதிலளிக்க தயார் என்று அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். கே.சி. வேணுகோபால் பேசிக் கொண்டிருந்த போதே குறுக்கிட்டு அமித்ஷா இவ்வாறு பதிலளித்தார். மசோதா குறித்து மக்களவையில் கடும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தொடரும் தொகுதி மறு வரையறை பிரச்சனை..! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு..!!