தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார். NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல என்றும் கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு எனவும் தெரிவித்தார். தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே 3 மற்றும் மே 7 நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக்கவும் நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார். ஆனால் இந்த ஊழலின் மிகப் பெரிய விலை என்ன என்று கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர், 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 21 குடும்பங்களின் வாழ்க்கை என்றென்றும் சோகத்தில் மூழ்கியுள்ளது என்றார்.

மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு தேர்வை ரத்து செய்ததால் மட்டும் பொறுப்பு முடிவடையாது என்று கூறியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்துவது போல, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 12 வருடங்களாக கல்வியை சீரழித்த பாஜக அரசு... தொடரும் போராட்டங்கள்...! மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு..!
இந்த மிகப்பெரிய கல்வி ஊழல் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். இந்திய மாணவர்கள் நியாயமான, வெளிப்படையான, நம்பகமான கல்வி அமைப்பிற்கு தகுதியானவர்கள் என்றும் தோல்வி, ஊழல், அலட்சியம் ஆகியவற்றிற்கு அல்ல எனவும் கூறிய மாணிக்கம் தாகூர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள் என்றும் இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அத்துமீறல்..! மாணவர்கள் மீது பெல்லட் குண்டுவீசி தாக்குதல்... ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!