கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கன்னியாகுமரியில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டை வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார். தமிழ்நாட்டின் தனித்துவமான மாவட்டமான கன்னியாகுமரி இந்திய துணை கண்டத்தின் தொடக்கம் என்று தெரிவித்தார். கன்னியாகுமரியில் 61 ஆயிரத்து 500 சதுர அடியில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மார்ஷல் நேசமணியின் போர்படை தளபதியாக விளங்கியவர் பொன்னப்ப நாடார் என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு பல்வேறு விஞ்ஞானிகளை தந்த குமரிக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி என்று கூறினார். முக்கடல் சூழ்ந்த குமரியில் முப்பால் கண்ட வள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் 4,260 கோடி ரூபாயில் 34 லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தேங்காய் பட்டினம் மீன்படி துறைமுக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் குளச்சல் மீன் பிடித்து துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய 150 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணையும் பிறப்பித்தார். குமரியில் சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீனவர்களை தண்டிக்கும் மத்திய அரசு..! அவ்ளோ அலட்சியம்... செல்வப் பெருந்தகை தாக்கு..!!