ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது.
ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது.

இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!

இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைப்பதற்காக நம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லாட்வியா நாட்டிற்கு சென்ற நம் எம்பிக்கள் குழு, அந்நாட்டு அரசு பிரதிநிதிகள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில், ஆபரேஷன் சிந்துார் பற்றி விளக்கியது.
குழுவை தலைமையேற்று சென்ற திமுக எம்பி கனிமொழி, நம் நாட்டின் ஒற்றுமை குறித்து பேசினார். செய்தியாளர் கூட்டத்தில் காஷ்மீர் மக்களின் மனநிலை மற்றும் நம் நாட்டின் ஒருமைப்பாடு பற்றி விளக்கினார். லாட்வியாவில் இந்திய எம்பிக்கள் குழுவுக்கு இங்குள்ள அரசு உற்சாக வரவேற்பு அளித்ததில் மகிழ்ச்சி.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவில் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள லாட்வியா, இரு நாடுகளிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக கூறியதில் மகிழ்ச்சி. நாங்கள் இங்கு வந்திறங்கியதும், இங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாடவிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் மத நம்பிக்கைகள் கேட்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இதன் மூலம் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எங்களை பிரிக்க முயற்சி நடந்தது. எங்கள் நாட்டை பிளவுபடுத்த பயங்கரவாதிகள் முயன்றனர். ஆனால் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் களத்தில் இறங்கினர். வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இனி எங்களை எந்த விதத்திலும் பிளவுபடுத்த முடியாது. இந்தியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணம் பலிக்காது என கனிமொழி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!