சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளின்படி கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கட்சி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கருத்து கேட்க உள்ளதாகவும் கூறினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் தான் போட்டியிட்டோம் என கூறிய அவர், தங்களை பொருத்தவரை NDA கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார். கடந்த தேர்தலில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டு வாக்குகளை பெற்றேன் என பேசிய ஓ.பன்னீர் செல்வம், அமித்ஷா தங்களை அழைக்காதாது உண்மையில் வருத்தம் அளிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் அண்ணே தூண்டில அங்கிட்டு போடுங்க... ஆதரவாளர்கள் கொடுத்த ஐடியா...!

இதையும் படிங்க: இனி டைரக்டா பாஜகதான்.. ஓ.பி.எஸ் இறுதி முடிவு... முக்கிய பதவிக்காக துண்டு போட்டு காத்திருக்கும் பணிவு..!