தமிழக அரசியலில் தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு மாற்றம் தான், முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளார் என்பது. ஓபிஎஸ் நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, தனியாக 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்' என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
கட்சியை திரும்பப் பெறுவதற்காக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என பல இடங்களில் போராடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அவரை மீண்டும் சேர்க்க மறுத்தது. பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளும் அவருக்கு ஆதரவு கொடுக்காமல் விலகின. இந்த நிலையில், அவருக்கு அரசியல் ரீதியாக தனிமை ஏற்பட்டது.
சமீபத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ஜெயலலிதா-எம்ஜிஆர் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று பகிரங்கமாக பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தானே முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், "திமுகவின் ஐந்தாண்டு ஆட்சி சிறப்பாக இருந்தது, மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது, மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" என்று பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிங்க: இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி...ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியம்... பின்னணியில் பாஜக...!

இதன் தொடர்ச்சியாகவே, அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்ற எம்எல்ஏக்கள் ஏற்கனவே தங்கள் பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தனர். இப்போது ஓபிஎஸ் தானும் அதே பாதையில் செல்கிறார். இன்று காலை அவர் தனது உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் டி நகரிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஒரே காரில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்டனர். ஓ பன்னீர்செல்வம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைகிறார். அதிமுக மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில் ஓபிஎஸ் என்ற திமுகவில் ஐக்கியமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING அதிரும் அரசியல் களம்... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?... இன்றே திமுகவில் ஐக்கியம்...!!