• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள போராட்டக்காரர்களில், 99 சதவீதம் பேர் தேச பக்தி கொண்டவர்கள் என பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகரான ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 10 Aug 2026 13:59:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan-POK-Protests-99-Percent-Patriotic-Rana-Sanaullah

    ‘போராட்டக்காரர்களில் 99% பேர் தேசபக்தர்கள்’... பாகிஸ்தான் பிரதமர் ஆலோசகரின் அதிரடி பேச்சு!

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் 99 சதவீதம் பேர் தேசபக்தர்கள் என, பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ரானா சனாவுல்லா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பொருளாதார நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகளை முன்வைத்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

    இதற்கிடையே, அங்கு மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், போராட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தானில் ஆளும் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவு குற்றம்சாட்டியது.

    இதையும் படிங்க: “இனி பாகிஸ்தான் மீது கைவைத்தால் நாங்க இறங்கி அடிப்போம்...” - சவுதி, துருக்கி செயலால் இந்தியாவிற்கு ஆபத்தா?

    மேலும், போராட்டக்காரர்களில் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்கள் பாகிஸ்தானின் எதிரிகள் என்றும் அந்த கட்சி தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்கள் பாகிஸ்தான் அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன.

    இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ரானா சனாவுல்லா, போராட்டக்காரர்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.

    kashmir

    அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களில் 99 சதவீதம் பேர் தேசபக்தி கொண்டவர்கள் என குறிப்பிட்டார். மேலும், போராட்டங்களை முன்னெடுத்து வரும் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவுடன், தங்கள் கட்சியின் பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ள அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமரின் ஆலோசகர் தெரிவித்திருப்பது, அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொருளாதார நிலை, விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான அதிருப்தி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போராட்டக்காரர்களை ஒட்டுமொத்தமாக எதிரிகளாக பார்க்க முடியாது என்பதை ரானா சனாவுல்லாவின் கருத்து வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    ஒருபுறம் போராட்டங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மறுபுறம் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் தேசபக்தர்கள் என பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகரே கூறியிருப்பது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

    இதனால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டங்களை பாகிஸ்தான் அரசு இனி எவ்வாறு கையாளப்போகிறது என்பதும், போராட்டக்காரர்களுடன் நடைபெற உள்ளதாக கூறப்படும் பேச்சுவார்த்தை எந்த முடிவை ஏற்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    மேலும் படிங்க
    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    குற்றம்
    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    இந்தியா
    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    அரசியல்
    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    தமிழ்நாடு
    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    குற்றம்
    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    இந்தியா
    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    அரசியல்
    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை...

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு

    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    தமிழ்நாடு
    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share