ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க வேண்டும், உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை பிரதமர் மோடி தலைமையில் நடத்தவும் வலியுறுத்தின.

இந்த நிலையில் ஜூலை 21 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்கி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் தங்கச்சி கனிமொழியை பார்க்க பெருமையா இருக்கு.. பாசத்துடன் வாழ்த்திய முதல்வர்!

பகல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்க தயார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவை பிரதிபலித்த எம். பி.க்கள் குழு! கனிமொழிக்கு ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு!