காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.
குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: உங்க தப்பால தான் எல்லாமே நடந்துச்சு! அத்தனையிலும் அரசியல்! மோடியை வெளுத்துவிட்ட மம்தா!

இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.
சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்த குழுக்களுக்கு பா.ஜனதா கட்சியின் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரசைச் சேர்ந்த சசிதரூர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜா, சிவசேனாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி மற்றும் தேசிவாத காங்கிரசின் சுப்ரியா சுலே ஆகியோர் தலைமை தாங்கினர்.
இவர்கள் தனித்தனி குழுக்களாக அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷியா, எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, குவைத், பக்ரைன், அல்ஜீரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், அரபு நாடுகள், லைபீரியா, காங்கோ, சியரா லியோன், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 33-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றனர். அங்கு அந்த நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினர்.

இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததும், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இந்தியா திரும்பினர். பின்னர் அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தங்களது பயண விவரங்கள் பற்றி கூறினர். இதையடுத்து அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர், பிரதமர் மோடியை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது அவர்களிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணத்தின் போது நடந்தவற்றை கவனமாக கேட்டறிந்தார். கட்சி பாகுபாடு இன்றி நாட்டின் ஒற்றுமையை அவர்கள் எடுத்துரைத்த விதத்தை பாராட்டினார்.மேலும் குழுவில் இடம் பெற்று இருந்த எம்.பி.க்கள், பிரதமரிடம் அறிக்கைகளை வழங்கினர். பின்னர் பிரதமருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். குழுவில் இடம்பெற்று இருந்த சுமார் 50 எம்.பி.க்களும் பிரதமருடன் தனியாகவும் பேசினார்கள். அவர்களை பிரதமர் தட்டிக்கொடுத்து பாராட்டினார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை மொத்தமா முடிச்சு விட்ட சசிதரூர்.. ஆபரேஷன் சித்தூருக்கு உலக நாடுகள் ஆதரவு..