புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சியைப் பிடித்து நிச்சயமாக வெற்றி பெறும் என்று அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
தேர்தல் வியூகங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாதனைகளையும், வருங்காலத் திட்டங்களையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார். புதுச்சேரி மக்களின் நலனை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்குப் போட்டியிட காங்கிரஸ் கட்சி சீட் வழங்கவில்லையே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரங்கசாமி, அது அவர்களது கட்சியின் உள்விவகாரம் மற்றும் நிலைப்பாடு. அதில் நான் கருத்து கூற ஏதுமில்லை; அது முழுக்க முழுக்க அவரது கட்சியினுடைய முடிவு என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!
2026 தேர்தல் களம் புதுச்சேரியில் சூடுபிடித்துள்ள நிலையில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளடக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இது ஒரு சவாலான தேர்தலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: அனல் தெறிக்கும்" புதுவை" அரசியல் களம்... திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!