புனேவில் உள்ள மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் இருந்த சுமார் 15 முதல் 20 சுற்றுலாப் பயணிகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 6 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து... ஏழு உயிர்கள் பறிபோன சோகம்!

வலுவான நீர் ஓட்டம் பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. தற்போது 15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்துக்கு காரணம்.. மீட்கப்பட்ட கருப்புப்பெட்டி சொல்லும் உண்மைகள்!