உத்தரகாண்டில் இருந்து இன்று காலை சுமார் 5:20 மணியளவில் ஸ்ரீ கேதார்நாத் தாமிலிருந்து குப்தகாஷிக்கு ஹெலிகாப்டர் ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில் கௌரிகுண்ட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் விமானி உட்பட ஆறு பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்களை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டர் செயல்பாடுகள் குறித்து கடுமையான வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அப்பா VS மகன்! இரண்டாக உடைந்த பாமக... உச்சகட்ட பரபரப்பு!

மாநிலத்தில் ஹெலிகாப்டர் சேவைகளை இயக்குவதற்கு கடுமையான விதிமுறைகளை தயாரிக்க வேண்டும் என்றும், அதில் ஹெலிகாப்டரின் தொழில்நுட்ப நிலையை முழுமையாக சரிபார்த்து, விமானம் புறப்படுவதற்கு முன் துல்லியமான வானிலை தகவல்களை எடுத்துக்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் தாமி கூறினார்.

ஹெலிகாப்டர் செயல்பாடுகளின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் முழுமையாக மதிப்பாய்வு செய்த பிறகு, SOP-ஐ தயாரிக்கும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் தாமி உத்தரவிட்டுள்ளார். ஹெலிகாப்டர் சேவைகளின் செயல்பாடு முற்றிலும் பாதுகாப்பானது, வெளிப்படையானது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி இருப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புர்கா போடலனா அடிச்சு சாவடிக்கிறாங்க... இப்படியே போனா 3வது உலகப் போர் கன்ஃபார்ம்! எச்சரிக்கும் கிருஷ்ணசாமி