குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். 1 பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் மாணவர்கள் விடுதியில் விமானம் விழுந்ததில் மாணவர்களும் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி தேடபட்டு வந்தது. விமானத்தின் கருப்பு பெட்டி என்பது விமான விபத்துகளை ஆய்வு செய்ய உதவும் இரண்டு முக்கியமான கருவிகளைக் குறிக்கிறது. இவை உண்மையில் கருப்பு நிறத்தில் இல்லை, பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும், ஏனெனில் இது விபத்து இடங்களில் எளிதாகக் கண்டறிய உதவுகிறது.
இதையும் படிங்க: "உனக்கு ஆயுசு கெட்டிப்பா".. மரணத்தை வென்றவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

விமானியின் உரையாடல்கள், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு, மற்றும் காக்பிட் உள்ளேயுள்ள ஒலிகளை இந்த கருப்பு பெட்டி பதிவு செய்கிறது. ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் இந்த பெட்டி தாங்கக்கூடியது. விமான விபத்தின் உண்மையான காரணம் எதுவும் இதுவரை தெரியாத நிலையில், துல்லியமான காரணத்தை அறிய இந்த கருப்பு பெட்டி உதவும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் எனப்படும் வீடியோ பதிவு மீட்கப்பட்டது. தற்போது விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியானது, விபத்து நிகழ்ந்த மாடியிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் இருந்து தொடர்ந்து 25 மணி நேரத்திற்கு பீப் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: குஜராத் துயரச்சம்பவம்! அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி.. கோர விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல்!!