புரி ஜெகன்நாதர் கோவில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில். இது கிருஷ்ணரின் வடிவமான ஜெகன்நாதர், அவரது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்திரை மற்றும் சுதர்சன சக்கரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று.

புரி ஜெகன்நாதர் கோவில் 11-ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்தின் மன்னர் அனந்தவர்மன் சோதகங்கதேவனால் மீண்டும் கட்டப்பட்டது. ரத யாத்திரை என்பது ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரை ஆகியோரின் திருவுருவங்களை மரத்தால் ஆன பிரமாண்டமான தேர்களில் வைத்து, கோயிலில் இருந்து குண்டிச்சா கோயிலுக்கு ஊர்வலமாக இழுத்துச் செல்லும் புனித விழா. இந்த விழா வைணவ மரபுகளுடன், பழங்குடி மற்றும் தாந்திரீக மரபுகளின் கலவையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

ஜூன்-ஜூலை மாதங்களுக்குள் 9 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்கின்றனர். இந்த தேரோட்டத்தில் 3 தேர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஜெகன்நாதரின் தேர், 45 அடி உயரமும் 16 சக்கரங்களும் கொண்டது. பலராமர் எனும் பலபத்திரரின் தேர், 44 அடி உயரமும் 14 சக்கரங்களும் கொண்டது. சுபத்திரையின் தேர், 43 அடி உயரமும் 12 சக்கரங்களும் கொண்டது. இந்த தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக மரத்தால் கட்டப்படுகின்றன. மேலும் புனித வேம்பு மரத்தால் ஆன மூலவர் சிலைகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றன.

தோட்டத்தின் தொடக்கமாக புரி நகர கஜபதி மன்னர் ரத வீதியை தங்கத் துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்யும் பாரம்பரிய வழக்கம் உள்ளது. முதலில் பலபத்திரரின் தேர், பின்னர் சுபத்திரையின் தேர், இறுதியாக ஜெகன்நாதரின் தேர் குண்டிச்சா கோயிலை நோக்கி புறப்படும். வழியில், மவுசிமா கோயிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான தேர்த்திருவிழா கோலாகலாமாக தொடங்கியது.

ஜூன் 27-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...